Athapookolam 2021
rangoli of the day
- Onam kolam
- Andal maalai
- Aadi Friday
- flowers kolam
- White n white
- 2021- Arunagirinathar Guru Poojai- June 24th 2021....
- 2021- Home Kolams
- White n white
- 2021-Shri Rama Navami.....
- Peacock
Andal garland and thulasi in the middle drawn by me as aadipooram kolam
11-6 interlaced dots flowers rangoli. DC: Swarna mam
This rangoli depicts the Thiruvannaamalai temple tower, Lord Ganesha and Saint Arunagirinathar......
Saint Arunagirinathar enters the northern entrance of the Thiruvannaamalai temple tower, has the dharshan of Lord Ganesha and tries to invoke His blessings by offering fresh flowers, to sing the Divine Glory/Holy Praise of Lord Subramanya, who is His younger brother.....
ஜன்ம ரட்சக மந்திரமே, ஜனனம் ஆன ராம நவமி. தர்மத்தின் முழுமையான வடிவம் , ரம்மியமான நாமம் தாங்கி வந்துதித்த| புனித தினம். பாற்கடலே பொங்கி வந்து பாரினை மேம்படுத்திய தினம். ராமா, ராமா என்று உருகி மனித குலம் கடைத்தேற , தினகரக் கொழுந்தாய் வந்தான். அன்பென்றால் உலகளாவ விரிந்திருக்க வேண்டும். பரிவென்றால் கடலாய் பரந்திருக்க வேண்டும். அது அகத்தில் ஊற்றெடுத்துப் பார்வையாய் மலர வேண்டும். பண்பென்றால் சிகரம் தொடவேண்டும். கடமை என்பது யாகக் கனல் போல் கையாளப்பட வேண்டும். தாயே கோயில், தந்தை சொல்லே மந்திரம் என்பது வாழ்க்கையின் அடித்தளமாக ஆக வேண்டும். உறவை ,நட்பை , ஒவ்வொரு இழையாய்ப் பார்த்துப் பார்த்து பின்ன வேண்டும் -- எனக் காட்டிக் கொடுத்தவன். சத்தியம், தர்மம் இரண்டு விழிகளாய்க் கொள்ளச் சொன்னான். சின்னச் சின்ன விஷயங்களில், பெரிய பெரிய, எண்ணங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்றான். அவன் காடுமேடுகளில் நடந்ததெல்லாம், நம்மைச் சம்சாரக் காட்டிலிருந்து விடுவிக்கத் தான். ஒரே பாணத்தில் ஆயிரமாயிரம் அசுர குணங்களை அழிக்கத் தான். மனித இனம், விலங்கினம் என்ற தளைகள் அகற்றி, உயிரினம் என்று கொண்டாடும் உன்ன்தம் உணரத்தான். ஆட்சி என்பது எப்படி அமைய வேண்டும் என வேந்தருக்குக் காட்டத்தான். முடியாட்சி என்ற பெயரில் அது குடியாட்சி தான் என மக்களை முன்னிலைப் படுத்தும் மாண்புதான். மனவளம், நிலவளம் செழிக்க வைத்தான். இன்பமும், அமைதியும் தழைக்க வைத்தான். புருஷோத்தமனே, உத்தம புருஷனாய் உதித்த அவதாரம். அவன் போட்டு வைத்த லஷ்மண ரேகைகள் அனந்தம். அவற்றை மீறாமல் கட்டுக்குள் வாழ்ந்தால் ஆனந்தம். தீனதயாளா, தினகரச் சுடரே, ராமா, சரணம் சரணம்- Mrs. Janaki Ramanan, Pune