Tamil kadiii....( Funny)

Submitted by Visitor (not verified) on Fri, 05/07/2010 - 23:23
1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை.... 2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி..... காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.... இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா? 3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?...... சீனாவுல தான் பிறந்தது..... ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY. 4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்.... 5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை..... நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?.. நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்.... 6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா? b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா? c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா? 7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க... எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க... என்ன கொடும சார் இது?.... 8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி... தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது.... 9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்... 10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது... சொல்லட்டுமா? பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க... ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?.... 11) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி.... முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி.... 12) தத்துவம் 2010 "லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"! "கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!! 14) நா‌ன் எழு‌தின கதை எ‌ப்படி இரு‌க்கு? ரொம்ப சுமாராத்தான் இருக்கு உப்பு சப்பே இல்ல! கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது 15) கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?" "கோழியினால்தான் முட்டை வந்தது" "எப்படி?" "ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை 16) பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா. அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு. பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா அம்மா: கெட்ட செய்தி பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க 17) நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்' குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?' 18) மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம் அப்பா: ஓன்னுமில்லை மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே. அப்பா:..???............. 19) ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான். பையன் என்ன பண்றான்? டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான் 20) நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் ! நபர் : ஏன்? நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் ! 21) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ? ? ? ? ? ? ? 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?........... Next மீட் பண்றேன்...